Tuesday, November 24, 2009

முதிர் கண்ணி...

பூக்காரி கூடையிலே,
108 பூக்கள் அம்மா...

கூவி கூவி விற்ற போதும்,
ஒத்த பூ மிச்சம் அம்மா...

யார் யாரோ பார்த்தாங்க,
விலை கொடுக்க மறுத்தாங்க...

அடி மாட்டு விலைக்கு அத,
எடுத்துக் கொள்ள பார்த்தாங்க...

மனம் வாடா பூவை அவள்...
தெருத் தெருவாய் எடுத்து சென்றாள்.

மொத்த நாளும் சுற்றி விட்டு,
சோர்ந்து போனாள் பூக்காரி...

களைப்பாற நினைத்த படி,
அரச மரத்தடியில் அமர்ந்தாள் அவள்!

விற்காத பூவை அவள்,
அருகில் இருந்த இறைவனுக்கு சூடி விட்டாள்!

விற்காத பூ அன்று,
விலை மதிப்பில்லாத பூ ஆனது!

அன்று ஒரு உண்மை புலப்பட்டது...
சில பூக்கள் விர்ப்பனைக்கு அல்ல!!!

No comments: