Tuesday, November 24, 2009

முதிர் கண்ணி...

பூக்காரி கூடையிலே,
108 பூக்கள் அம்மா...

கூவி கூவி விற்ற போதும்,
ஒத்த பூ மிச்சம் அம்மா...

யார் யாரோ பார்த்தாங்க,
விலை கொடுக்க மறுத்தாங்க...

அடி மாட்டு விலைக்கு அத,
எடுத்துக் கொள்ள பார்த்தாங்க...

மனம் வாடா பூவை அவள்...
தெருத் தெருவாய் எடுத்து சென்றாள்.

மொத்த நாளும் சுற்றி விட்டு,
சோர்ந்து போனாள் பூக்காரி...

களைப்பாற நினைத்த படி,
அரச மரத்தடியில் அமர்ந்தாள் அவள்!

விற்காத பூவை அவள்,
அருகில் இருந்த இறைவனுக்கு சூடி விட்டாள்!

விற்காத பூ அன்று,
விலை மதிப்பில்லாத பூ ஆனது!

அன்று ஒரு உண்மை புலப்பட்டது...
சில பூக்கள் விர்ப்பனைக்கு அல்ல!!!

Friday, November 20, 2009

சூழ்நிலைக் கைதிகள்...

ஒரு அடி எடுத்து வைத்தேன்,
தாயின் பாசம் தடுத்தது...
மறு அடி எடுத்து வைத்தேன்,
தந்தையின் முதுமை தடுத்தது...

முன்னேற நினைக்கையில்,
குடும்பம், சமுதாயம், ஏழ்மை, மானம், ரோசம்...
இப்படி அடுக்கு அடுக்காய் கம்பி வேலிகள்...

உடைத்து எறிய துணிவில்லை...
என் கையில் ஏனோ தெம்பும் இல்லை...

சுத்தி முத்தி பார்த்தேன்...
என்னை போல பலரும்,
தெம்பில்லாத மனிதர்களாய்...
எலும்பு இல்லாத ஜந்துகளாய்...
கூட்டம் கூட்டமா அங்கே குமிந்து கிடந்தனர்...

அழுவதுக்கும் முடியவில்லை...
கண்ணீருக்கும் அந்த இடம் பிடிக்கவில்லை போல...
வெளியே வர மறுத்தது...
மாறாய் எதர்க்கும் பழகி போன முகம்,
கண்ணீரை புன்னகையாக வெளிப்படுத்த ஆரம்பித்தது...

நான் எங்கு இருக்கிறேன்???
அருகில் இருந்த நண்பரிடம் கேட்டேன்...
நண்பா... நாம் எல்லாம் "சூழ்நிலை கைதிகள்" என்றான்,
காலில் இருக்கும் சங்கிலியை சரி செய்த படி...