Friday, March 26, 2010

பிறப்பு!

பிறப்பு!

சொர்க்கம், நரகம்
இரண்டுக்கும் ஒரே வாசல்!
உண்மை அறிந்தேன்!
அன்னை மடியில் குழந்தையாய்
பிறந்த பின்!

சொர்க்கத்தில் இருந்து துரத்தி
அடிக்கப் பட்டு,
இரக்க பிறந்த,
கோடானு கோடி மனிதர்களில்
நானும் ஒருவன் ஆனேன்!

கதறி அழுதேன்!
இரத்தம் தலை கீழாய் பாய்கிறது!
ஈவு இராகம் இன்றி,
என் அழுகையை
வேடிக்கை பார்க்கின்றது கூட்டம்!

இது தான் நரகம் என்பதா?

No comments: