Friday, November 20, 2009

சூழ்நிலைக் கைதிகள்...

ஒரு அடி எடுத்து வைத்தேன்,
தாயின் பாசம் தடுத்தது...
மறு அடி எடுத்து வைத்தேன்,
தந்தையின் முதுமை தடுத்தது...

முன்னேற நினைக்கையில்,
குடும்பம், சமுதாயம், ஏழ்மை, மானம், ரோசம்...
இப்படி அடுக்கு அடுக்காய் கம்பி வேலிகள்...

உடைத்து எறிய துணிவில்லை...
என் கையில் ஏனோ தெம்பும் இல்லை...

சுத்தி முத்தி பார்த்தேன்...
என்னை போல பலரும்,
தெம்பில்லாத மனிதர்களாய்...
எலும்பு இல்லாத ஜந்துகளாய்...
கூட்டம் கூட்டமா அங்கே குமிந்து கிடந்தனர்...

அழுவதுக்கும் முடியவில்லை...
கண்ணீருக்கும் அந்த இடம் பிடிக்கவில்லை போல...
வெளியே வர மறுத்தது...
மாறாய் எதர்க்கும் பழகி போன முகம்,
கண்ணீரை புன்னகையாக வெளிப்படுத்த ஆரம்பித்தது...

நான் எங்கு இருக்கிறேன்???
அருகில் இருந்த நண்பரிடம் கேட்டேன்...
நண்பா... நாம் எல்லாம் "சூழ்நிலை கைதிகள்" என்றான்,
காலில் இருக்கும் சங்கிலியை சரி செய்த படி...

No comments: