Monday, June 15, 2009

ஆஸ்திரேலியா-வில் அடிக்கிறான்...

அடிக்கிறான்... அடிக்கிறான்...
ஆஸ்திரேலியா-வில் அடிக்கிறான்...
துடிக்கிறான்... துடிக்கிறான்...
இந்தியன் இங்கே துடிக்கிறான்!!!

நிறம் தன்னில் இனம் கண்டு,
வெறி கொண்டு அடிக்கிறான்...
அவன் நாட்டில் குடி புகுந்தோம் என,
சொல்லி சொல்லி அடிக்கிறான்...

உலக நாட்டு மக்களே,
உண்மை உற்று நோக்குவீர்!
உண்மை அதிவாசியை.. .
விரட்டி ஓடி அடித்தவன்...
வெள்ளைத் தோளினை கொண்ட,
ஈரோப்பியன் அவன்...

சொந்த நாடு என்று அதை...
உரிமை கொள்ள பார்க்கிறான்...
மற்ற நாட்டு மனித உரிமையைப்,
பறித்துக் கொள்ளப் பார்க்கிறான்...

அடிக்கிறான்... அடிக்கிறான்...
ஆஸ்திரேலியா-வில் அடிக்கிறான்...
துடிக்கிறான்... துடிக்கிறான்...
இந்தியன் இங்கே துடிக்கிறான்!!!

3 comments:

காயத்ரி மகாதேவன் said...

//இந்தியன் இங்கே துடிக்கிறான்//

இந்தியன் (மன்மோகனும் சோனியாவும் மட்டும்) இங்கே துடித்திருந்தால்
14வது அடி அங்கே விழுந்திருக்காது...

தமிழனுக்கு மட்டும் இல்லை எந்த இந்தியனுக்கும் (தலப்பாகட்டினரைத் தவிர) பாராபட்சம்
காண்பிக்கப்போவதில்லை போல... (எல்லோரும் கூட்டத்தோடு பலி கொடுக்க முடிவு செய்தாலும் செய்வர் இந்த அரசியல் பெருச்சாளிகள்).

காயத்ரி மகாதேவன் said...

//இந்தியன் இங்கே துடிக்கிறான்//

மாப்ளே, இந்தியன் "எங்கே" துடிக்கிறான் னு எழுதுடா...

Unknown said...

Nanba, Indian inge neeyum naanum thanada...