Thursday, March 19, 2009

எது கலிகாலம்???

தினத்தந்தியில் ஒரு கொலை செய்தி.
கலிகாலம் என்றான் என் நண்பன்.
மல்லாக்கப் படுத்து, வரலாற்றைப் புரட்டிப் பார்த்தேன்.
நல்ல காலம் எது என தேடி...

முதல் பக்கத்திலேயே,
மூர்ச்சை அடைந்து போனேன்.
அடுத்த அடுத்த பக்கங்களில்,
அடுக்கு அடுக்காய் கொலைகள்...
பதினைந்து பக்கம் தாண்டி ஓடினேன்...
பக்கத்திற்கு பக்கம் கொலைகள்.
பெண்ணை அடைய சில...
பெண்ணை அடக்கி சில...
பொன்னைத் தேடி சில...
மண்ணை நாடி சில...
நாட்டை பிடிக்க சில...
நாட்டை காக்க சில...
மதத்தின் பெயரில் சில...
இனத்தின் பெயரில் சில...
வீரத்தின் அடையாளமாய் சில...

இப்படி பலப் பல கொலைகள்...
படித்து முடிக்கையில்,
என் கைகளில் ரத்த வாடை...
பாவம் மூட்டை பூச்சுக்குத் தெரியுமா?
தான் இருப்பது கலிகாலம் என??? :)